Tuesday, June 30, 2015

காகிதப் பூக்கள்

காகிதப் பூக்கள்
மணப்பதில்லை
கண்களைக் கவர்ந்து
ஈர்த்திழுக்கும்.

சூசகமாகவே நான்
உணர்த்தியிருந்தும்
உரைக்கவில்லை உனது
புத்தியில்

கவிஞன் நீயதை
உதறியதாலே
கலங்கி வரைகிறாய்
சோகக்கதை.

கண்களைத் திறந்துவை
கருத்தில்கொள்
கலைஞன் நீயிரு
கவனமாகவே.

கவலை வேண்டாம்
இனிமேலும்
ஒருநிலைப் படுத்து
உன்மனதை.

காகிதப் பூக்கள்
மணப்பதில்லை
கண்களைக் கவர்ந்து
ஈர்த்திழுக்கும்.

#நீலா


No comments:

Post a Comment