Monday, June 29, 2015

கவிக்கொரு அரசன் அவன்தானே



கவிக்கொரு அரசன் அவன்தானே
புவிக்குநற் புலவனு மவன்தானே

தமிழை அவன்தான் ஆண்டானே
தமிழே தானென வாழ்ந்தானே


தமிழுக்கே தனையும் ஈந்தானே
தமிழால் எமையும் ஈர்த்தானே

கனியாய்க் கவிகள் புனைந்தானே
சுவையாய் எம்மில் இனித்தானே

எங்கே நிம்மதி என்றேதேடி
அங்கோர் இடமும் கண்டானே.

ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
அவன்புகழ் இங்கே மங்காது

அவனுக்கு அழிவும் இங்கில்லை
அவனால் செந்தமிழ் மணக்கிறதே!

வாழிய எங்கள்க் கவியரசே!
வாழிய மங்காச் செந்தமிழே!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment