Tuesday, June 30, 2015

வெறுமையுடன்

கன்னியுனைக்
காணாதயென்
கண்களெலாம்
கண்ணீர்த் திவலைகளில் 

மூழ்கியே
முட்டுகின்றன
மூச்சிழுக்க
முயன்றும்

முடியாமல்
முடிவைத்தேடியே
முற்றாமலே
முதிரத்துடித்து

உதிரம் வற்றி
உறையாமலே
உரிமையற்ற
உரையாடலை

நெஞ்சில்
நிறுத்தி
இறக்கவும்
இயலாது

இறுக்கி்ய
உருக்கினை
பற்றிப்பிடித்த
சிமிட்டிக்காரைக்

குழம்பதன்
வலுவான
பிணைப்பிலே
விடுபட

முடியாத
கருங்கல்
சல்லிகள்
மணற்துகள்

போலவே
நாளும்
பொழுதும்
நகருகின்றன


வெறுமையுடன்

#நீலா


No comments:

Post a Comment