Tuesday, June 30, 2015

மழைமகளே

எமது தாகம் தணித்து
தேகம் குளிர வைத்து
நல் ஆரோக்கியம் தந்து
வாழ்வின் இறுதி வரை
கூடவே கலந்து வரும்
வளம் குன்றா அட்சயமே

பூமித்தாய் மனம் மகிழ
புண்ணியம் செய்தவளே
விவசாயம் தழைத்கோங்க
விண்ணின் வழி வந்தவளே
இன்னபிற தேவைகளை
தனை ஈந்து தீர்த்தவளே.

நிறமில்லா நீர்த்தாயே
இத்தலம் செழித்தோங்க
இன்பமாய் உனைத் தந்து
மண்ணுயிர் காத்து நிற்கும்
மாசற்ற உத்தமியே மாதாவே
வணங்குகிறேன் மழைமகளே.


 நீலா

No comments:

Post a Comment