Tuesday, June 30, 2015

நெருக்கம் வேண்டியே!



கண் விழித்ததும்
கன்னம் தந்து

என் இதழ்களால்
சின்னம் வரையச்
சொல்லும் உனது
ஆர்வத்தில் நான்
விழித்தும் இன்னும்
விழிக்காதது போல்
இமைகளை மூடியே
காத்துக் கிடக்கின்றேன்
கொலுசு ஒலிக்க நீ
அருகினில் வரும்
நெருக்கம் வேண்டியே!


‪#‎நீலா‬

No comments:

Post a Comment