Monday, June 29, 2015

ஏழுநாளாக் காணலயே



எதிர்வீட்டுப் பெண்ணவளை ஏழுநாளாக் காணலயே
என்னாச்சோ ஏதாச்சோ எதுவுமே புரியலையே
புதிர்ப்போட்டுப் போனவளை விடைசொல்லத் தேடுறேனே
சதிராடும் என்மனதைப் புரியாமல் போய்ட்டாளே


குதிரைவால்ச் சடைபோட்டு குதித்துக்குதித்து நடப்பாளே
எதிரில்வந்து எம்மனசை உசுப்பேத்திச் செல்வாளே
பதராயிருந்த பாவியென்னை பதம்பாத்துப் போனாளே
வருவாளா மாட்டாளா வாசலிலே காத்திருக்கேன்.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment