Monday, December 16, 2013

Wednesday, December 4, 2013

வீணை அருகில் இல்லாத போதினிலும்.

வீணை பேசி விலகிச் சென்ற பின்னும்
விரல்களின் மோதல் அடங்கவில்லை இன்னும்.
துடித்துக் கொண்டுதான் தவிக்கின்றது
மீண்டும் மீண்டும் மீட்டச் சொல்லி
வீணை அருகில் இல்லாத போதினிலும்.

சங்கேத பரிமாற்றங்களா.,?

பச்சைக் கிளிக்குஞ்சொன்று
படபடப்பபாய் கூடு தேடிப்
பறந்து போவதை குரங்கெப்படி
கண்டுணர்ந்தது...?
ஒரு மரத்து சொந்தங்களா இல்லை
சங்கேத பரிமாற்றங்களா.,?

மழை வருவது மயிலுக்குத் தெரியும்...

மழை வருவது மயிலுக்குத் தெரியும்...
மனம் போவது நட்புக்குத் தெரியும்...
துணை வாடுதல் காதல் உணரும்...
உயிர் பிரிதலில் ஊனும் வலிக்கும்...

நிலாக் காயலில்

நிலாக் காயலில் உதிக்கும்
துன்பச் சுரங்கள் யாவும்
இளங்காலைப் பகலவனின் 
இதம் பரவிக் கரைந்து மாய்கிறது.

"வருந்தாதே மனமே"

நலம் விசாரித்து அகம் மகிழ
ஆறுதல் சொல்ல உயிரோடு
உறவாடும் உன்னத நட்பூக்கள்
அருகிலும் தொலைவிலும் அன்புடன்
உலவுகையில் நானொருவன் கேட்காதது 
ஒரு பெருங்குறையல்லவே...!
அது உன் 
செவிமடுத்தும் உளம் உணரா
வெறும் வாய்ச்சொல் தானே...!
இருப்பினும் உரைக்கின்றேன் என்
மனசாட்சி உறுத்துவதால்...
"வருந்தாதே மனமே"

புறா பறந்தது.

கூண்டை விட்டு புறா பறந்தது..
சீண்டும் காக்கைளும் அடங்கிக் போனது
வெறித்தோடிக் கிடக்கிறது மரக்கிளைகள்
கனி சுவைப்போர் யாருமின்றி தோப்புக்குள்..

செல்லக் குருவியே


Monday, November 25, 2013

எப்போது என் பதிவு .........?

கோளச் செவ்வாயில்
குடியேற இப்போதே
முன்பதிவாம்.....!

உன் 
கோலச் செவ்வாயில்
ரசம் பருக எப்போது 
என் பதிவு .........?

உனை எழுதி ரசிக்க...!

அகத்தினுள் கிடக்கும்
அகராதியை அலசிப் 
பார்த்து விட்டேன்....!

அகப்படவில்லை
அழகு வார்த்தைகள்
உனை எழுதி ரசிக்க...!

நிலவுக்கு இரவுப்பணி

நிலவுக்கு
இரவுப்பணி
நட்சத்திரத் தோட்டத்தில்...

என்

மனதுக்கு
நினைவுப்பணி
நரம்புக் கூட்டத்தில்...

கன்னச்சாலையில் நெரிசலா?

தலையணை கேட்டது
கண்ணீரை...

இன்று ஏன் தாமதம்?
கன்னச்சாலையில் 
நெரிசலா? இல்லை 
கண்களில் உற்பத்தி
தடங்கலா?

நீல வானம்.

சந்தேக மேகங்கள் 
விலகிச் சென்ற பின்னும்
கறுத்துத் தான் கிடக்கிறது
நீல வானம்.

வானத் தோழன் ...

வெண்மேகத் தோழியை
காற்றுக் காவலன் 
கலைத்துக் கடத்தியதால்...
ராக்கோழிகளின் ஏளனச் 
சிரிப்பில் வருந்தி 
மௌனமாய் இருட்டில் 
விடியலை நோக்கி 
வானத் தோழன் ...

சீராய்ச் சீவியசிகைக் கருமுடி


Thursday, November 14, 2013

Monday, November 11, 2013

Tuesday, October 15, 2013

Monday, October 14, 2013

Thursday, September 19, 2013

நினைக்காதே...!

நினைக்காதே...!
அழைக்காதே...!
பேசாதே...!
எழுதாதே...!
அனுப்பாதே...!

என்றெல்லாம் நீ 
சொல்லிச் சென்ற பின்
அதையெல்லாம்
சொல்லத் தூண்டுகிறாயோ
என்றெண்ணிக் குழம்புகிறேன் நான்...

ஏனென்றால்.... 
எதிர்மறை அர்த்தங்களே
பெண்களின் அகராதியில்
என்று முன்னோர்கள் 
சொல்லிக் கேட்டதுண்டு.

Tuesday, September 17, 2013

நீ கோழிக் குஞ்சுமல்ல,

நீ கோழிக் குஞ்சுமல்ல,
நான் கள்ளப் பருந்துமல்ல
உன்னை கொத்திச் செல்வதற்கு...

தாய்மடி புகுந்துறைந்தது போதுமடி
வெளியே வந்து உறவாடு
துணிவுடன் விளையாடு....!

                                                     
                                                    நீலா

Sunday, September 15, 2013

அம்மி

அடி மேல் அடி வைத்தால்
அம்மியும் நகருமாம்..........

இடி மேல் இடி இடித்தும்
இம்மியும் நகரவில்லை
இப்பெண்ணின் கல்மனம்.

பல்லி

எங்கோ ஒரு மூலையில்
சுவரைப் பற்றிக்கொண்டு
காரியத்தில் கவனமாய்
அசையாமல் பல்லி..........

அதன் கிச் கிச் குரலுக்கு
காத்திருப்பில் நான்.........

பயணம்


Saturday, September 14, 2013

நீ ஒருத்தி போதுமடி.

வெட்டிப் பேச்சு வேண்டாமென
களையெடுத்தேன் பலரை
நீ எட்டி நின்று சிரித்ததனால்....

கட்டிப்போட்டு கவர்ந்தாய் எனை
கண்ணாலும் மனதாலும்
நீ ஒருத்தி போதுமடி....

நெஞ்செல்லாம் இனிக்குதடி....

கவிக்கரு


Thursday, September 12, 2013

Wednesday, September 11, 2013