Tuesday, June 30, 2015

எழுந்தாடுதடி என் உள்ளம்.



கலகலக்கும் வளையோசைகளில்
சிலுசிலுக்குதடி என் தேகம்.
சிலுசிலுக்கும் கொலுசொலிகளில்
துடிதுடிக்குதடி என் மனமும்.


துடிதுடிக்கும் இதழ்ச்சுரங்களில்
படபடக்குதடி என் கண்கள்.
படபடக்கும் இமையலைகளில்
பரபரக்குதடி என் விரல்கள்.

பரபரக்கும் நடையழகினில்
பளபளக்குதடி என் விழிகள்.
பளபளக்கும் இடையசைவினில்
எழுந்தாடுதடி என் உள்ளம்.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment