Thursday, September 19, 2013

நினைக்காதே...!

நினைக்காதே...!
அழைக்காதே...!
பேசாதே...!
எழுதாதே...!
அனுப்பாதே...!

என்றெல்லாம் நீ 
சொல்லிச் சென்ற பின்
அதையெல்லாம்
சொல்லத் தூண்டுகிறாயோ
என்றெண்ணிக் குழம்புகிறேன் நான்...

ஏனென்றால்.... 
எதிர்மறை அர்த்தங்களே
பெண்களின் அகராதியில்
என்று முன்னோர்கள் 
சொல்லிக் கேட்டதுண்டு.

Tuesday, September 17, 2013

நீ கோழிக் குஞ்சுமல்ல,

நீ கோழிக் குஞ்சுமல்ல,
நான் கள்ளப் பருந்துமல்ல
உன்னை கொத்திச் செல்வதற்கு...

தாய்மடி புகுந்துறைந்தது போதுமடி
வெளியே வந்து உறவாடு
துணிவுடன் விளையாடு....!

                                                     
                                                    நீலா

Sunday, September 15, 2013

அம்மி

அடி மேல் அடி வைத்தால்
அம்மியும் நகருமாம்..........

இடி மேல் இடி இடித்தும்
இம்மியும் நகரவில்லை
இப்பெண்ணின் கல்மனம்.

பல்லி

எங்கோ ஒரு மூலையில்
சுவரைப் பற்றிக்கொண்டு
காரியத்தில் கவனமாய்
அசையாமல் பல்லி..........

அதன் கிச் கிச் குரலுக்கு
காத்திருப்பில் நான்.........

பயணம்


Saturday, September 14, 2013

நீ ஒருத்தி போதுமடி.

வெட்டிப் பேச்சு வேண்டாமென
களையெடுத்தேன் பலரை
நீ எட்டி நின்று சிரித்ததனால்....

கட்டிப்போட்டு கவர்ந்தாய் எனை
கண்ணாலும் மனதாலும்
நீ ஒருத்தி போதுமடி....

நெஞ்செல்லாம் இனிக்குதடி....

கவிக்கரு


Thursday, September 12, 2013

Wednesday, September 11, 2013