Tuesday, June 30, 2015

கூர் மழுங்கியதோர் சிற்றுளி


சிலை வடிக்கும் சிற்பிக்கே
கலை சொல்லித் தருகிறது
கூர் மழுங்கியதோர் சிற்றுளி.

கூறுகெட்ட உளியே உன்னை
சீர்படுத்திக்கொள் நீ முதலில்
பின்னர் வா பட்டறைக்குள்.

பட்டழுந்தியபின் புரியும் உனக்கு
சிலை வடிக்கும் அதிசிறந்த
கலையின் நுணுக்கம் எதுவென.

கைகளுக்குள் அடங்கியே தலையில்
அடிவாங்கு துள்ள நினைக்காதே
துவண்டு வீழ்ந்து விடுவாய்.

#நீலா

No comments:

Post a Comment