Monday, June 29, 2015

இன்றெனக்குக் கவிவிருந்தே!



செண்பகப் பூக்கள் செழித்து மலர்ந்ததோர்
தீர்த்தக் குளக்கரையில் மேல்வானம் மெல்லச்
செங்கதிரொளி இதமாய்ப் பாய்ச்சிடும் மாலைப்
பொழுதினில் மையல் கொண்டே நானமர்ந்து


எண்ணச் சிறகுகளை விண்ணில் பறக்கவிட்டு
வண்ணக் கவிதைதனை வரையவே கருதேடி
சிந்தனை மிகுந்திடவே எண்ணி இருக்குங்கால்
வந்தனள் ஓரெழில் மங்கையென் கண்முன்னே

எந்தனை நோக்கவில்லை தன்துணை எவருமில்லை
வந்தவள் குளமிறங்கி பொன்மேனி நீராடுமழகினிலே
என்னுள் உருவானதே நற்றமிழ்க் கவிக்கருக்கள்
ஒன்றல்ல ஓராயிரம் இன்றெனக்குக் கவிவிருந்தே!

‪#‎நீலா

No comments:

Post a Comment