Monday, June 29, 2015

சின்னப் பூவே



சின்னப் பூவே
நீயென் எண்ணந்தனிலே
நிறைந்திருக்கிறாய்...!

*


என்றும் உன்னை
என் கண்ணைப் போலவே
காத்திருப்பேனே...!

*

வண்ணம் கொண்ட
பட்டாம் பூச்சியாய்
மகிழ்ந்திருப்போமே...!

*

சுகந்தம் தாங்கிய
வசந்தம் நோக்கியே
பறந்திருப்போமே...!

*

இன்பம் யாவையும்
அள்ளிச் சுவைத்தே
இணைந்திருப்போமே...!

*
‪#‎நீலா‬

No comments:

Post a Comment