Tuesday, June 30, 2015

நட்பினைப் பழிக்காதே



நட்புக்கு
ஆணென்ன பெண்ணென்ன
அதற்கேது வரம்பு?
எவரிடத்தில் எதிர் பால்
நட்பு இல்லை?
அதிலென்ன இழிவு கண்டீர்
எம் நட்பே?
ஒழுக்கமான நல் நட்பில்
தவறு இல்லை.


ஆண் பெண்ணிடமும் பெண்
ஆணிடமும் நட்பு கொள்வது
இழிவென்று எவர் சொன்னார்
மூடப்பிராணியே முட்டாள் மகனே

இனக் கவர்ச்சி இருக்குமடா
இரத்தத்தில் ஊறியது அது
சுத்தமாக பழகி விட்டால்
சுகமுண்டு நல்ல நட்பில்.

நட்பினைப் பழிக்காதே பாதகா
உன்னத உறவுடா மூர்க்கனே
புத்தியைத் தீட்டிக் கொள்ளடா
குதர்க்கமாய்ப் பேசாதே காமுகா.

மலர்களைச் சுவைக்க வட்டமிடும்
உனக்கது தெரிய வாய்ப்பில்லை
உனது பரம்பரைப் புத்தியினை
மூட்டைகட்டு முன்னேற வழிதேடு.

உன்னைப் போல் பிறரை எண்ணாதே.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment