Tuesday, June 30, 2015

சீண்டலும் தீண்டலும்



எவரும் தீண்டவே யில்லை என்றெண்ணி
சீமைக் கருவேல மொன்றைச் சீண்டியதால்

கூரிய முட்கள்க் கிழித்துக் கீறிக்கொண்டேன்
எனக்கு நானே என்சொல்ல சீண்டியயென்


கரங்களுக்குச் சிறந்த பரிசாய்ச் செங்குருதியு
மதன் வேதனையுமாய்ச் சுமந்தே திரிகின்றேன்

தனிமைக் காட்டினிலே தவித்தே கிடக்கின்றேன்
வேண்டா மினியொரு சீண்டலும் தீண்டலும்

வேதனைக் கீறல்களும் வெதும்பித் திரிதலும்
வதங்கிய வாடல்களும் போதுமடா சாமியே!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment