Monday, June 29, 2015

தனிப்பயிற்சி



கண்ணாண கண்மணியே உன்
கையோடு கைச்சேர்த்து நாம்
நடைப்பயிற்சி செய்யலாம் வா...!

நடைப்பயிற்சி செய்கையிலே உன்
இடைப்பயிற்சி செய்வதை என்
விழிபார்த்து நான் ரசிக்க...


விழிகளும் இடவலம் உருண்டோடி
தனிப்பயிற்சி எடுத்திடுமே கலைமானே
என் இனியவளே எழிற்சிலையே...!

தனிப்பயிற்சி எடுக்கையிலே உன்
விழிபேசும் தொனி உணர்ந்து
மொழிப்பயிற்சி பெற்றிடுமே என்மனது,

மொழிபயின்ற மனதினிலே இனிவரும்
என்னெழுத் தெல்லாம் உனதழகைப்
புனைந்தே நற்கவிப்பயிற்சி அடைந்திடுமே...!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment