Saturday, October 22, 2011

தானாய் திறந்தவை


உனை நினைத்ததும்
தானாய் திறந்தவை
மனக்கதவு மட்டுமல்ல
என் எழுத்தாணியும் தான்..

Friday, October 14, 2011

Tuesday, October 4, 2011

கவிதை எழுதப் போறேன்

கவிதை எழுதப் போறேன்
நான் கவிதை எழுதப் போறேன்.
கண்ணே...!
உன் கோவைச் செவ்வாய்
மெல்லிதழ் மலர்ந்து
வார்த்தை ஒன்று
தந்துவிடு.
அதையே என்
கருப்பொருளாய்
கைகொண்டு
கவிதை எழுதப் போறேன்.
உன் திருவாய் மலர்ந்து
உதிர்த்த முத்து என் காதில்
விழுந்தும் விழாமலுமாய்
மெதுவாய் இசைக்கிறது
“அன்பே” என்று…
ஆட்கொண்டேன்
அதை முதல் முத்தாய்.
அடுத்துதிரும் அருமுத்து
என்னவென்று நானறிவேன்.
“ஆருயிரே…!”
அது தானே?
என்றும் உன் ஆருயிராய்
உனக்குள்ளே நானிருப்பேன்.
மீதமும் நீ சொல்லிவிடு
நான் நோக்கும் நல்வார்த்தை.
முத்தாய்ப்பாய் இக்கவிதை
முழுமை பெற அவ்வார்த்தை…
காதலுடன் உனக்காய் நான்
கவிமுடிக்க காத்திருப்பேன்…

Wednesday, September 14, 2011

Wednesday, September 7, 2011

Saturday, August 20, 2011

பனித்துளிகள்...


.
பனித்துளிகள்...

செவ்விதழ் மேல்
பன்னீராய் படர்ந்திருக்கும்
பனித்துளிகள்

காண்பதற்கு தனிஅழகு
யாரறிவார் இதழ்களவை
எதிர்வரும் தன் உதிர்வுக்காய்

தான் கொண்ட துயரத்தால்
சிந்திய கண்ணீரே
வெண் முத்துக்களாய்.....