Monday, June 29, 2015

இளமஞ்சள் வெயில்



இளமஞ்சள் வெயில் கொண்ட
பொன்மாலைப் பொழு தொன்றில்
கலைரசிக்கும் ஆவலில் நான்
மலர்ச்சோலை தனை யடைந்தேன்,


பொற்சிலைப் போலும் எழிலொன்று
தலைகுனிந் தெனைக் கடக்கையிலே
சேல்விழி யோரக் கணையாலே
செவ்வித ழோர நகையோடு

இளநெஞ்சில் வீசிச் சென்ற
மின்னல்ப் போல்த் தாக்குதலில்
நிலைக் குலைந்துச் சிலையானவன்
நானல்லவோ நீயறியாய்ப் பேரழகே!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment