Sunday, June 13, 2010

என் வீட்டுத் தோட்டம்.

என் வீட்டுத் தோட்டம்.

என் வீட்டுத் தோட்டத்தில்
சின்னஞ்சிறு கூட்டங்களாய்
மென் தளிர்கள் மெல்ல நகும்
கண் களிக்கும் மனம் குளிக்கும்

வண்ண வண்ணக் கோலங்களாய்
வானவில்லின் ஜாலங்களாய்
மணம் பரப்பும் நறு மலர்கள்
கானம் பாடும் சிறு கவிகள்.

மாலையிலும் அதி காலையிலும்
மலர் மேலும் பனித்துளி மீதும்
மனம் கவரும் கொடிதனிலும்
சிறகடித்து வட்டமிடும்

வண்ணத்து பூச்சிகளின்
வனப்பை நான் களிக்கையிலே
இனமறியாப் பேரின்பம்
எனக்குள்ளே எழுந்திடுமே

பட்டுப்போல் பறந்தோடி
மெட்டுக்கள் பலபாடி
சிட்டுக்கள் சிரித்தாடி
தட்டும் என் மனக்கதவை

சிட்டுக்களின் மெட்டொலியை
கேட்டுப் பல நாளாச்சு
காணக் கிடைக்கா அக் காட்சியினை
மறுமுறை நான் காண்பதெப்போ!

இளவெயில் நேரத்தில்
முன்பகலும் பின்ப்கலும்
புல்வெளிப் பரப்பினிலே
தாவிக் குதிக்கும் வெட்டுக்கிளி
கிட்டப் போய் உள்ளங்கையில்

பொத்திப் பிடிக்க உட்கார்ந்தால்
பட்டென்று குதித்தோடும்
பாங்கினை என்சொல்வேன்.
பரவசத்தை என்னென்பேன்.

வெட்டுக்கிளி ஒருபக்கம்
தத்தித்திரியும் அணிற்பிள்ளை
அதனினும் இனிய ஆனந்தம்
காலால் குதிப்பா வாலால் குதிப்பா

அறியும் ஆர்வத்தில் அருகில் சென்றால்
அறியாச் சிறுமியாய் அழகாய் ஓடும்.
கொறிக்கக் கொடுத்தால் இதமாய் பொருக்கி
பதமாய் கடிக்கும் பவ்யம் பேரின்பம்.

முன்னே செல்லவா இல்லை
பின்னே செல்லவா என தவித்தபடி
ஒல்லிக் குச்சியாய் முடிவில்லாமல்
துள்ளிப் பறக்கும் தட்டான் பூச்சிகள்

சாரை சாரையாய் உணவை ஏந்தி
ஊர்ந்து செல்லும் சித்தெரும்புகள்
கடமையே கருமமாய் தமக்கே
உடமை இவ்வழி என்று அவ்வழி

சீருடை அணிந்த பள்ளிச் சிரார்கள் போல்
சீராய் செல்லும் கருத்தை என் நெஞ்சில்
பதித்த பக்குவம் இன்னும் மனதில்
நிருத்தி நடக்கிறேன் ஒழுக்க சீலனாய்.

செடி கொடிகள் மட்டுமன்றி
செழிப்பாய் ஒரு மாமரமும்
செங்காய்கள் கனிகள் தந்து
செவ்வனே நிழலும் தந்து

வெயில் நாளில் இளைப்பாற
மழை நாளில் குடையாக
மனமெல்லாம் சுகம்தேட
மௌனமாய் உரையாட

நல்னண்பன் நானிருக்க
நாளெல்லாம் எனக்காக
தவமிருக்கும் கற்கண்டு
தனியாளாய் பல்லாண்டு.

பல்லின்பம் பகிர்ந்து அளித்து
மனமகிழ்ந்த சிறிய சிங்காரம்
என் வீட்டுத் தோட்டம்.
எழில் சிந்தும் தோட்டம்.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

No comments:

Post a Comment