Sunday, June 13, 2010

சிட்டுக் குருவி

சிட்டுக்குருவி என்றாலே
சிறகடிக்கும் நம் உணர்வுகள்
பட்டுப்பறவை அதனழகை
விட்டுச்செல்ல மனம் வருமோ!

காலயில் கண் விழிப்போம்
ரீங்காரம் கேட்டவுடன்
மாலையில் மயங்கிடுவோம்
அலங்கார ஊர்வலத்தில்

கிட்ட வந்து கொத்தித் தின்னும்
பாங்கான பறவை இது
வட்டமிட்டு துள்ளி ஒடும்
சாந்தமான பிள்ளை இது

சில நாட்களில் எவரேனும்
சிட்டுக்குருவி பார்த்ததுண்டா?
சின்னஞ்சிரு துள்ளல்களை
சிந்தையிலே ரசித்ததுண்டா?

பார்த்திருக்க முடியாது
ரசித்திருக்க வாய்ப்பில்லை
ஏனென்று சொல்லிடவா
என்னுள்ளே எழுந்தவற்றை.

நடமாடும் தொலைபேசி
நிருவணங்கள் எழுப்பிவிட்ட
கோபுரங்கள் மின்னலையை
நகரெல்லாம் நாடெல்லாம்

பறப்பிவிட்ட கோலத்தால்
பறந்து களித்த சிட்டுக்குருவிகள்
மறைந்து விட்டன மாயமாய்
சிறந்த சேவை செய்தனரே!

மனமாற வாழ்த்துவோம் நாம்
நிருவனங்களின் சேவைதனை
உருவாக்க முடியாதோர்
உலைவைக்க முயன்றாரே!


என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment