Sunday, June 13, 2010

விடியும்வரைக் காத்திரு

வானத்து விடிவெள்ளி
வழிமேல் விழிவைத்து
என்வரவை எதிர்னோக்கி
மணிகணக்காய் காத்திருந்தும்
நான் போக மறந்து விட்டேன்.

கண்ணே உன் கண்ணுக்குள்
நுழந்து விட்டால் என் கண்ணிமையும்
மறக்குதடி உறக்கத்தை
மறுநாள் உனக்காண
கண்ணுறக்கம் வேண்டாமோ!

செல்கின்றேன் துணையுறங்க
உனைப்பிரிய மனமின்றி
என் முகனூலே வருவேன் உன்
விழி தேடி மொழி பயில
விடியும்வரக் காத்திரு.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

No comments:

Post a Comment