Sunday, June 13, 2010

விரிசல்கள்

கல்லோடு கல்லாக
கலந்துவிட்ட கோமானே!
நீ பிழைசெய்து பதித்தாரோ!,
இல்லை
சாகா வரம் வேண்டி
தவம் செய்து சமைந்தாயோ!

உலகத் தமிழர்கள்
சிதரல்கள் ஒருங்கிணைக்க
சித்தம் உறைத்தாயோ!
இல்லை
எம்பெண்டிர் கதறல்கள்
ஓலங்கள் கேட்டுறைந்தாயோ!

உன்னெஞ்சின் விரிசல்கள்
உணர்கின்றோம் மாமனிதா,
எண்ணக் கனவெல்லாம்
வண்ணக் கோலங்களாய்
மனம்போல் ஈடேறும் .

விரிசல்கள் கூடிவிடும்
விரைவாக மாறிவிடும்.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

No comments:

Post a Comment