Sunday, June 13, 2010

மழைத்தூறல்


மலையடிவாரம் மழைத்தூறல் போடும்
மனதுக்குள் ஈரம் மௌனமாய்ப் பேசும்

தூரலுடன் சாரல் சன்னமாய் சிதரும்
சிதரிய துளிகள் செல்லமாய்த் தீண்டும்

துளிகளின் தீண்டல் மேனியை வருடும்
முகத்தில் படர்ந்து முத்தமாய் சிந்தும்.

விரலால் தடவி மெல்ல நீக்கியும்
திரும்ப திரும்ப அதையே நாடும்

முகத்தை உயர்த்தி முழுவதும் ஏற்கும்
நாவை நீட்டி சுவையும் தேடும்

தேகம் நனைந்தும் நேசம் நெருங்கும்
ஆடை குளிந்தும் ஆசைகள் பொங்கும்

தாய் வைதாலும் அசட்டை செய்யும்
தந்தை முறைத்தாலும் பதுங்கிச் சீரும்

ஜுரம் அடித்தாலும் ஜலதோசம் வந்தாலும்
நாளையும் செய்யும் இதையே மனம்.

வர்ணம் செய்யும் இந்திர மாயம்
எவரையும் ஈர்க்கும் இன்ப ஜாலம்.


என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment