Sunday, June 13, 2010

சித்திரைக் கத்தரி

சித்திரைக் கத்திரியில்
உத்திரம் வேகுதடி
உதிரம் கொதிக்குதடி
மதுரம் புளிக்குதடி

தேகம் வேர்க்குதடி
வேசம் நனையுதடி
சுவாசம் பெருகுதடி
நேசம் நொருங்குதடி

பாசம் போனதடி
சுகவாசம் தொலைந்ததடி
தலைக் கவசம் உருகுதடி
சிலைகூட இளகுதடி

நீரும் மணக்குதடி
மோரும் இனிக்குதடி
பழங்கஞ்சி ருசிக்குதடி
இளங்காற்றைத் தேடுதடி


பிழைப்பு போனதடி
மழைக்கு ஏங்குதடி
துணிச்சல் பறந்ததடி
விளைச்சல் வேண்டுமடி.

வானம் பொய்த்ததடி
தூவானம் வருமோடி
செவ்வானம் சாயுதடி
நல்கானம் பாடுதடி

வெண்மேகம் கருக்குதடி
கோடையிடி இடிக்குதடி
வர்ணம் பொழியுமடி
வெள்ளம் வரும் ஓடி


என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment