Sunday, June 13, 2010

வீட்டுப் பாடம்..

"யாரெல்லாம் வீட்டுப்பாடம் எழுதிட்டு வரல?
எந்திரிச்சு நில்லுங்க.
ஹும்...! சீக்கிரம்...!"

முருகன், குருசாமி, லட்சுமி..!
முணு பேரா..!

"டேய் முருகா..! எண்டா எழுதல?""

"சார் எங்க வீட்டுல நேத்து கரண்டு இல்ல சார்."

"ராத்திரி தான கரண்டு வேணும் சாய்ங்காலம் என்ன செஞ்ச?"

"சார் நான் வீட்டுக்கு போம்போது வீடு பூட்டி இருந்துச்சு சார்,
எங்கம்மாவ காணும் சார், அவா ஆறு கருக்கல்ல தான் சார் வந்தா."

"இந்த நொண்டி சாக்கெல்லாம் சொல்லாத படுவா,
உன்னப் பத்தி தெரியும் எனக்கு.
ஒழுங்கா நாளைக்கு வரும்போது இன்னைக்கும் சேத்து
மொத்தமா எழுதிட்டு வரணும் புரிஞ்சுதா,
இண்ணைக்கு உனக்கு மாப்பு, போடா."

"டேய் குருசாமி..! உனக்கென்னடா ஆச்சி..!
உங்கம்மா சினிமாக்கு போய்ட்டாளா?"

"இல்ல சார், அது வந்து சார்.."
"என்னடா வந்து, போயி.."

"அது வந்து சார், எங்கப்பாவ நாயி கடிச்சிட்டுது சார்.."

"டேய்..! என்னடா சொல்ற.."

"ஆமா.., சார்..எங்கப்பா கொல்லப் பக்கம் போனாரா..?
அங்க ஒரு நாயி குட்டி போட்டுட்டு படுத்திருந்துச்சா..?
இவரு உக்காந்த உடன லொள்ளுன்னு கொலச்சிட்டு
வேகமா வந்து கால்ல கடிசிருச்சி சார்.., அதான் வைதியர் கிட்ட போயிட்டு வர நேரமாயிருச்கி சார்.."

"என்னடா கத விடுற..? எதாவது சொல்லி தப்பிச்சிருவியே தெனமும்,
அதெல்லாம் தெரியாது, இண்ணைக்கு தப்பிக்க முடியாது,
இங்க மேசை பக்கதில வந்து ஒரு மணி நேரம் முட்டங்கால் போடு,
அப்பந்தான் நீ சரியா வருவ"

"ஏய்.. லட்சுமி..! உனக்கென்ன..? உங்க பாட்டி மண்டய போட்டுட்டாளா..?

"இல்ல சார்..! எங்க பாப்பா அழுத்க்கிட்டே இருந்தாளா.., அதுக்கு எங்கம்மா.."

" என்ன ஒங்கம்மா.., நொங்கம்மா.., ஓங்கி விட்டேன்னா..!"

"சார்.. அடிக்காதீங்க சார்.., நான் சொல்றது நெசம் சார்..கேளுங்க சார்..."

' சரி.. சொல்லு சீக்கிரம்.., உங்க குடும்ப கத எல்லாம் கேட்டுட்டே இருந்தா எப்ப பாடம் நடத்துறது..?"

"எங்க பாப்பா அழுதுக்கிட்டே இருந்தாளா, எங்கம்மா எங்கிட்ட பாப்பாவ பாத்துக்கோ..
நான் போயி கெணத்துல தண்ணி எடுத்துட்டு வாரேன்னு சொல்லிட்டு போனாங்களா..
ஏழு மணிக்கு தான் சார் வந்தாங்க.. அதான் எழுதிட்டு வரல சார்.."

"உன்ன இப்படியே விட்டா சரிப்பட்டு வர மாட்டே.., கிரவுண்டுக்கு போயி பத்து ரவுண்டு அடிச்சிட்டு வா..! ஆள விட்டு எண்ணிக்கிட்டே இருப்பேன். ஏமாத்தினியோ..! கால்ல கயித்த கட்டி தல கீழ தொங்க விட்டுருவேன். ஒடு.."

"டேய்.. எல்லாரும் கேட்டுக்கோங்க. யாராவது இனிமே வீட்டுப்பாடம் எழுதாம வந்தா.., இங்க மணலப் போட்டு அது மேல ஒரு மணி நேரம் முட்டங்கால் போட விட்டுருவேன். புரிஞ்சிதா..?


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

No comments:

Post a Comment