Sunday, June 13, 2010

பாசம்

உனக்குள் உதித்து உரைந்து
உறங்கிக் கொண்டிருக்கிறது
உன்னை உணர்ந்து.
நீ கண் விழித்தால் பொங்கி எழும்.
கண்களைத் திறந்து உறங்காதே
மெல்ல விழித்து அழைத்துப்ப பார்
உன் கண் வழியே உருகி வரும் அந்த உரைகல்.
பாசம் உன் பாசறைக்குள்
பாசம் பிடித்து படர்ந்திருக்கிறது,
ஒரு நுனியை மெதுவாய் பிடித்து இழுத்துப்பார்,
மொத்தமாய் எழுந்திரிக்கும் முத்தமாய்.

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment