Sunday, June 13, 2010

வண்ணத்துப் பூச்சி

ஏய்! வண்ணத்துப் பூச்சி
உன் வண்ணத்தை தேய்ச்சி
என் எண்ணதில் பூசி
உன் சின்னத்தை நேசி

கண்முடி தூங்கயிலே
முன்னாடி பாய்ந்து வா
உனை நாடி ஏங்கயிலே
துணை தேடி பறந்து வா

எங்கிருந்து பெற்றாய் நீ
எழில் கொஞ்சும் வண்ணங்களை
எனக்கும் நீ சொல்லிவிடு
பிணங்காமல் ரகசியமாய்

பட்டுப் போல் சிறகுகளை
விரிக்கின்ற வடிவுகளை
எட்டி நின்று பார்க்கையிலே
பரவசித்தேன் எனக்குள்ளே

எத்தனை வண்ணமடி
வானவில் வர்ணமடி
எந்தனை கொள்ளையிடும்
கானமும் சேர்ந்தோடி வரும்

உன்போல பிறந்து விட
விண்மேலே பறந்து விட
தன்னார்வம் தோன்றுதடி
கண்களும் ஏங்குதடி

சின்னஞ்சிரு பாலகனாய்
உனைச் சுற்றி வந்தேனே
எப்படியும் பிடித்துவிட
முட்டி மோதி திரிந்தேனே

பட்டாம்பூச்சி உன்னோடு
நானும் பறந்து சுழன்றேனே
அதையெல்லாம் மறந்தாயோ
திசைமாறிப் சென்றாயோ

இப்போதும் நினைகையிலே
எண்ணமெல்லாம் துள்ளுதடி
வண்ண வண்ண தூரிகைகள்
மனதுக்குள் வீசுதடி

மறுபடியும் என் தோட்டத்தில்
வருமுன்னே சொல்லிவிடு
ஒருவர்பின் ஒருவராக
இருவருமே களித்திடுவோம்.


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment