Sunday, June 13, 2010

முகமொரு கண்ணாடி

முகமொரு கண்ணாடி
அகப்பொருள் நுகர்ந்து
வெளிக்கொணரும் நம்

முகமொரு கண்ணாடி.

இன்பன் துன்பம்
ஏக்கம் தாக்கம்
வியூகம் தாகம்
சிந்தனை வஞ்சனை

எத்தனை உத்திகள்
சத்தம் அடங்கியே
பதுக்கம் நம்முள்
அத்தனை எண்ணமும்

மோப்பம் பிடித்து
முகத்தில் ஒளிரும்
அகத்தின் அலைகள்
முகத்தில் ஒளிக்கும்

சட்டியுள் சோற்றை
அகப்பையில் கோரும்
மனம்மறைத்த வர்ணம்
உனையுணர்த்தும் முன்னம்

முகமொரு கண்ணாடி
நம் முகமொரு கண்ணாடி


--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

No comments:

Post a Comment