Sunday, June 13, 2010

தமிழ் மரம்

காய்ந்தாலும் ஓய மாட்டேன்,
ஓய்ந்தாலும் சாய மாட்டேன்,
சாகா வரம் பெற்றேன்,
எனக்கில்லை மனக்கவலை,

எழுச்சியுண்டு எனக்குள்ளே,
தளிர்த்து நிற்பேன் தரணியிலே,
தனியாய் நின்றாலும்,
தளர மாட்டேன் தமிழ் மகனே,

தாவிடுவேன் வானம் வரை,
கூவிடுவேன் வெல்லும் வரை.
"வாழ்க தமிழ்!"
"வெல்க தமிழ்!"

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

No comments:

Post a Comment