Wednesday, July 30, 2014

ஜீவன் இல்லையாம்

என் கவிதை வரிகளில் ஜீவன் இல்லையாம்
எப்படி இருக்கும்?
அதைக் குடித்துச் சென்று விட்டாளே அவள்.

குடித்ததைத் திருப்பிக் கொடுக்கவும் 
கொடுத்ததைத் திருப்பி எடுக்கவும் 
மனமில்லை இருவருக்கும்

ஜீவ பரிமாற்றங்களில் மட்டும்
கரைகிறதெங்கள் நொடிகளும் நாட்களும்
சேர்ந்து மகிழ்ந்திட வழியில்லாமல்

பிரிதொரு ஜென்மத்திலேனும் இணையும்
எங்கள் காதல் ஜீவன்கள் பிளவில்லாமல்
என்ற நம்பிக்கையுடனே...

No comments:

Post a Comment