Wednesday, July 30, 2014

சேதி சொல்லிப் போனாலென்ன கிளியே

சேதி சொல்லிப் போனாலென்ன கிளியே
நானும் சோகமின்றி இருப்பேனடி கிளியே
தவிக்க விட்டுப் போனவளே கிளியே
திரும்பி நீயும் வருவதெப்போ கிளியே

காலை முதல் கவலையில் நான் கிளியே
கால் கடுக்கக் காத்திருக்கேன் கிளியே
மாலை வேளை கூடுதடி கிளியே
மாமன் மனம் வாடுதடி கிளியே

கருக்கும் முன்னே வந்திடடி கிளியே
கண்ணுக்குள்ளே குடி இருக்கும் கிளியே
மனசெல்லாம் நோகுதடி கிளியே
நீயும் விரசாக வந்திடடி கிளியே.

-நீலா




No comments:

Post a Comment