Wednesday, July 30, 2014

துளித்துளியாய்

துளித்துளியாய் விழும் மழைச் சிதறல்களின்
குளிர்ச்சியினால் சிலிர்த் தெழுந்துத் துளிர்க்கும்
பச்சிளந்தளிர்கள் போல் கண் விழித்தெழுந்தேன் 
உன்னிதமான செம்மென்னிதழ் ரசவமுதம் என்
கன்னக்கதுப்பின் மேல் படர்ந்தொரு சுகம்பரவி
உன்னதக் கிளர்ச்சி பொங்கிப் பெருகியதால்.....

நீலா


No comments:

Post a Comment