Wednesday, July 30, 2014

இன்பத்தின் எல்லையை அளந்து வரலாம்

இனிய உறவே...! 
இன்முகம் காட்டி எனை மகிழ்விக்கிறாய் நீ..!
துன்பங்கள் தொலை தூரம் பறந்து போயின
எண்ணங்கள் யாவும் எழுச்சி அடைகின்றன
வண்ணங்கள் பூத்துக் குலுங்குகிறது நெஞ்சில்
வசந்த வாசல் அழைப்பு விடுக்கிறது
சுகந்தம் எனைச்சுற்றி வட்டமிடுகிறது
சொந்தம் கொள்ள அடம் பிடிக்கிறது மனது
பந்தங்களைக் கலந்து நல்வழியொன்றை காட்டிவிடு
அந்தமானவளே எனை ஆட்கொள்ளடி,
அன்பால் நாம்

இன்பத்தின் எல்லையை
அளந்து வரலாம் வா....!

No comments:

Post a Comment