Wednesday, July 30, 2014

இதமாய் வளரட்டும் அர்ச்சனைகள்

எட்டு கால பூஜைகளும்
இடைவிடாமல் நாளும் 
நடக்கிறது இதயராணிக்கு

இராஜாவோ மயக்கத்தின் வாசலில்
மங்கிய ஒளியினில் தூங்காமல்
நித்தம் பஞ்சணைப் பரவசத்தில்

பூஜையின் லயித்து திளைப்பால்
இராணியோ பூரிப்பின் கிறக்கத்தில்
இரவு பகலேதும் அறியாமல்.

இன்பச் சுரங்கள் தொடரட்டும்
இனிதே சுவைக்கட்டும் தனிமைகள்
இதமாய் வளரட்டும் அர்ச்சனைகள்.




No comments:

Post a Comment