Wednesday, December 4, 2013

"வருந்தாதே மனமே"

நலம் விசாரித்து அகம் மகிழ
ஆறுதல் சொல்ல உயிரோடு
உறவாடும் உன்னத நட்பூக்கள்
அருகிலும் தொலைவிலும் அன்புடன்
உலவுகையில் நானொருவன் கேட்காதது 
ஒரு பெருங்குறையல்லவே...!
அது உன் 
செவிமடுத்தும் உளம் உணரா
வெறும் வாய்ச்சொல் தானே...!
இருப்பினும் உரைக்கின்றேன் என்
மனசாட்சி உறுத்துவதால்...
"வருந்தாதே மனமே"

No comments:

Post a Comment