Monday, July 6, 2015

உதிரம் கலந்த உறவே.



நெஞ்சில் புகுந்த மஞ்சக் கிழங்கே
எங்க அத்தை பெத்த கத்தரிப்பிஞ்சே

தங்கக் கிளியே சொந்தக் குயிலே
அங்கம் மின்னும் அந்தி வெயிலே


மங்கை எந்தன் வாடா மல்லியே
மங்காது ஒளிரும் வெள்ளி நிலவே

சிந்தை நிறைந்து இனிக்கும் கனியே
எந்தன் உதிரம் கலந்த உறவே.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment