Monday, July 6, 2015

சுட்டுவச்ச இட்டிலியும்



சுட்டுவச்ச இட்டிலியும்
சுவைமிகுச் சட்டினியும்
தட்டினிலே ஓராறு
வாயினிலே தேனாறு.


இன்னுமோராறு சூடாக
இருக்குதுப்பாரு எனக்காக
இட்டிலிக்குண்டான் உள்ள
கொண்டாட்டம் நெஞ்சுக்குள்ள

உண்டான பசியெல்லாம்
பறக்குதுப்பாரு பஞ்சாக
பன்னிரண்டு இட்டிலியால்
பண்ணிரண்டு பாடுதுவாய்.

மல்லிகைப்பூ கொண்டைக்காரி
கண்டாங்கிச் சேலைக்காரி
மணமணக்கும் கைக்காரிக்கு
தினமும் நானடிமைதானே!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment