Monday, March 9, 2015

அகமுடைத்தாள்

அகமுடைத்தாள்
என்னகமுடைத்தாள்
முகமூடியணிந்தே
என்னகமுடைத்தாள்
அகந்தனிலகந்தை கொண்டே
முகந்தனில் முறுவலித்தே
என்னகமுடைத்தாள்.
மலரம்புதனை எய்தி
தினமென்னைத் தின்றுவிட்டு
இனம்கண்டு சேர்ந்துகொண்டு
என்னகமுடைத்தாள்
குணந்தனைக் குப்பையிட்டே
மனந்தனைத் திரையிட்டு
என்னகமுடைத்தாள்
அகமுடைத்தாள்.

No comments:

Post a Comment