Monday, March 9, 2015

குறுஞ்செய்திகளைப் பார்பதில்லை



குறுஞ்செய்திகளைப் பார்பதில்லை

குறுகிப்போய்க் கிடக்கின்றேன்

அவரெதுவும் அனுப்ப மாட்டாரெனத் தெரியும்...


தவறிய அழைப்புகளைக் காண்பதில்லை
அவரழைக்க மாட்டாரெனத் தெரியும்...


நடக்கி்ன்றேன் கால்போன போக்கில்

பாதை தெளிவில்லாமலே...


கிடக்கின்றேன் கல்லிலோ முள்ளிலோ

படுக்கையொன்றிருப்பதை அறியாமலே...


குளிப்பதும் குடிப்பதும் கடமைக்காகவே

வாடிக்கையாக உணர்வுகள் உந்துதலால்...


விட்டத்தை மட்டும் தவறாமல் பார்க்கிறேன்

வளர்பிறை எப்போது தோன்றுமென...


என்னுள் ஏனிந்த மாற்றங்கள்

ஏமாற்றம் ஒன்றேதான் வேறெதற்கு

இத்தனை வீரியங்கள்...


காரியங்கள் யாவையும் கடமைக்கே

காரிருள் சூழ்ந்திட்ட காரணத்தால்

வெறுமை நிறைந்திட்ட நெஞ்சக்

குமுறல்களை எவரிடம் சொல்லி அழ?


‪#‎நீலா‬

No comments:

Post a Comment