Monday, March 9, 2015

சில நேரங்களில் சில மனிதர்கள்



சில நேரங்களில்

சில மனிதர்கள்

சிலர் வாழ்வில்

சில உறவுகள்


அவ்வப்போது

பயணிக்கின்றனர்

சிலர் விருந்தினராக

சிலர் மருந்தாக


சிலர் தங்கி விடுகின்றனர்

சிலர் தவிக்க விடுகின்றனர்

சிலர் மங்கி விடுகின்றனர்

சிலர் தவிர்த்து விடுகின்றனர்


இருப்பினும் பயணங்கள் தொடர்கிறது

பழையன கழிதலும்

புதியன புகுதலும்

அஃறிணைகளுக்கு மட்டுமல்ல

உயர்திணைகளுக்கும் தான்.


வாழும் சில காலத்தில்

மகிழ்ச்சியை எடுத்தும்

கொடுத்தும் அன்பாய்

இணந்திருப்போமே...!!!


‪#‎நீலா‬

No comments:

Post a Comment