Wednesday, April 4, 2012

ஆரம்பம் உன்னுடனே


ஆரம்பம் உன்னுடனே
கரம் பற்றி நாளும் நான்
தாரம் போல் சேர்ந்தே வா……!

ஈரம் உலராமல் என்
உரம் ஏற்றும் உன்னதமே
சரம் சரமாய் சக்தியைத் தா…!

சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்
பாரம் ஒரு பொருட்டில்லை
தூரம் போய் வதைக்காதே…..!

தரம் பார்த்து அணைத்து வந்தேன்
திரம் அனைத்தும் நீயென்று
சோரம் போய் களிக்காதே…..!

நிறம் எனக்கு தேவையில்லை
சுரமில்லா எந்திரமே
வீரம் தான் வேண்டுமடி…….!

நீலா...

No comments:

Post a Comment