Thursday, April 29, 2010

மனம் களிக்கும் பிரம்மாக்கள்.

வான் நீலம் கடல் வாங்கி
தான் நீலம் கொண்டதேனோ?

கடல் நீரை வான் வாங்கி
நிலம் குளிரத் தந்ததேனோ?

வானும் கடலும் தொலைவில்
வாழ்ந்தாலும் இரண்டும் கைகோர்த்தே

நிலம் செழிக்கத் தனை ஈந்து
மனம் களிக்கும் பிரம்மாக்கள்.

No comments:

Post a Comment