Wednesday, July 30, 2014

காரியத்தில் கவனமாய் பல்லி...

எங்கோ ஒரு மூலையில்
சுவரைப் பற்றிக்கொண்டு
இரைப்பையை நிரப்ப
காரியத்தில் கவனமாய்
பல்லி...

அதன் கிச்... கிச்...
குரலுக்காய் கண்விழித்துக்
கன்னத்தில் கையூன்றிச்
செவிமடுத்துக் காத்திருப்பில்
நான்...




துளித்துளியாய்

துளித்துளியாய் விழும் மழைச் சிதறல்களின்
குளிர்ச்சியினால் சிலிர்த் தெழுந்துத் துளிர்க்கும்
பச்சிளந்தளிர்கள் போல் கண் விழித்தெழுந்தேன் 
உன்னிதமான செம்மென்னிதழ் ரசவமுதம் என்
கன்னக்கதுப்பின் மேல் படர்ந்தொரு சுகம்பரவி
உன்னதக் கிளர்ச்சி பொங்கிப் பெருகியதால்.....

நீலா


தவிக்கிறேனடி எழிலே...!

உன் வளைவுகளின்
நல் விளைவுகளால்
நான் நிலையிழந்து
தவிக்கிறேனடி எழிலே...!

பெண்ணின் மனது

என்னால் உன்னை அளக்க முடியும்
உன்னால் என்னை அளக்க முடியாது.

நான் உன்னில் நுழைய முடியும்
நீ என்னில் நுழைய முடியாது.

பெண்ணின் மனது





"I CAN MEASURE YOU BUT YOU CAN'T MEASURE ME,
I CAN ENTER YOU BUT YOU CAN'T ENTER ME"

(இதையே முதல் இரண்டு வரிகள் பெண் சொல்வதாகவும் அடுத்த இரண்டு வரிகள் ஆண் சொல்வதாகவும் இருந்தால் அது 18+ ) 

அழகிய யுத்திகளே...!

அரிதாரப் பூச்சுக்களும்
அலங்கார அம்சங்களும்
அரைகுறை ஆடைகளும்
ஆண்களை இம்சிக்க
எத்தனிக்கும் யுவதிகளின் 
அழகிய யுத்திகளே...!


பிரிவின் வலி

பிரிவின் வலி 
மிகக் கொடியது. 
எனக்கிது 
இலையுதிர் காலம்...! 

நீலா



சிலைகளும் கலை இழக்கின்றன

சேலை கட்டி நீ
வெளியே வராதே ஒயிலே
சிலைகளும் கலை இழக்கின்றன.